பூக்கள்

உனக்காக என்றால்
தற்கொலை படையாக மாறி
என் கையில் வந்து
சிரித்துக்கொண்டே மரிக்கிறது பூக்கள்...

இன்று புதிதாய் ஒரு உலகம்....

இன்று புதிதாய் ஒரு உலகம்....
கடவுளா நீ?

என் பாலைவனத்தில் மழை...
யாரால் முடியும்....கடவுளால்...
கடவுளா நீ?

வாயை மூட மட்டுமே பயன்படுத்திய
உதடுகள் ...இன்று புன்னகைக்கவும் செய்கிறதே....
யார் சொன்னால் உதடு கேட்க்கும்... மனம் சொன்னால்...
மனம் என்றால்....இதயம்.....
என் இதயமா நீ.....

இன்று மீண்டும் பிறந்தது போல் உணர்கிறேன்...
யாரால் என்னை பெற்றடுக்க முடியும்...தாயால்....
என் தாயா நீ?...

எல்லாமே நீ...நீதான்.... உன்னால்தான் முடியும்...
ஏன் தெரியுமா....
நான்தான் நீ...

தூறல்

உனக்கே என்னை புரியாதபோது
என்னை
எனக்கு எப்படி புரியும்....

என்னுடன் நான் இருந்தகாலம்
அதிகமிருக்கலாம்..... ஆனால்
என்னுள் நீ இருந்த காலம் அதிகம்....

ஓவ்வொரு முறையும் அவதாரம்
எடுக்க
நான் கடவுளும் இல்லை...நீ பக்த்தையும் இல்லை...

தூறல் வானிலிருந்து மட்டுமல்ல
கண்களிலிருந்தும் வரும்.....

அடை மழைக்கு முன் அரவணைத்துவிடு....

Swa.Le (சொந்தம் லேகனம் - என் பத்திரிகை

இத்தனை நாளும் தொலைக்காட்சியில் "Breaking News" பார்த்ததற்கும் இனிமேல் நான் பார்க்கபோகும் "Breaking News" -க்கும் மிக பெரிய வித்தியாசம் இருக்கும். காரணம் - Swa.Le (சொந்தம் லேகனம் - என் பத்திரிகை).

ஒவ்வொரு தற்போதைய செய்தியின் பின்னணியிலும் இதுபோன்ற ஒரு பத்திரிக்கையாளனின் செய்தியும் இருக்கிறது என்று நினைக்கும் போதே உள்ளம் பதறுகிறது. ஒவ்வொரு நிகழ்வையும் பத்திரிகை தர்மம் எனும் கண் கொண்டு பார்க்கும் கண்களுக்கு அதற்க்கு கொஞ்சம் கீழே இருக்கும் பத்திரிக்கையாளனின் இதயம் தெரியாமல் போயிருமோன்னு தோண வைக்கிறது..

கதை.... மரண தருவாயில் இருக்கும் கேரளத்தின் மிகப்பெரிய எழுத்தாளனின் வீட்டின் முன் கூடியிருக்கும் பத்திரிகை நிருபர்களின் ஒருவனின் வாழ்க்கை. அதுவும் அந்த எழுத்தாளனுடன் சின்ன வயதின் ஒரு பருவத்தை அவருடன் கழித்து அந்த உந்துதலில் பத்திரிக்கையாளனாய் ஆனா ஒருவனின் கதை.

இன்னும் நிறைய எழுதனும்னு ஆசை ... படத்தை பற்றி... ஆனால் வேண்டாம் ... படம் பாருங்கள்...

எளிய முறையில் கணிதம் – சிறுவர்களுக்கு… பாகம்-2 (விடையை சரி பார்த்தல்)

போன பதிவில் எப்படி பெருக்குவது என்று பார்த்தோம்.  இப்போ நாம் செய்து முடித்த கணக்கு சரிதானா என்பதை சுலபமா எப்படி சரி பார்ப்பது என்பதை பார்க்க போகிறோம்.

eg.  12  x 14 = 168    இதை எப்படி சரி பார்ப்பது?…

இந்த கணக்கை மூன்று பகுதியாக பிரிக்க போகிறோம். 

1.அதாவது நம்ம கணக்கில் முதல் எண் 12. இப்போ இதை 1+2 என்று கூட்டிக்கொள்ள வேண்டும். அப்போ 3 விடை.

2. இப்போ இரண்டாவது எண். 14. அதையும் 1+4 = 5 என்று கூட்டிக் கொள்வோம்.

இப்போ முதலில் உள்ள விடையையும் இரண்டாவது உள்ள விடையையும் பெருக்கவும். 3 x 5 = 15 . இதுவும் இரண்டு இலக்கமாக வருவதல் இதையும் பக்கவாட்டில் கூட்டவும் ( 1 + 5 = 6)  இப்போ நம்ம விடை 6.

3. இப்போ நம்ம கணக்கின் மூன்றாவது பகுதி… 1 + 6 + 8 = 15 . விடை இரண்டு இலக்கமாக இருப்பதால் மீண்டும் 1 + 5 = 6

முதல் விடையும் இரண்டவது விடையும் ஒரே மாதிரி வந்தால் நம்ம கணக்கு சரி…………….

தொடரும்….

எளிய முறையில் கணிதம் – சிறுவர்களுக்கு… பாகம்-1

இது சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் இருந்து …  அது ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழ் படுத்தியிருக்கிறேன்.

image

இதை பெருக்க வேண்டும் என்றால் நாம் முதலில் இந்த இரண்டு எண்களையும் 10 ஆக்க என்ன வேண்டும் என்பதை கணக்கிட்டு கொள்ள வேண்டும்.  அப்படி கணக்கிட்டால் இப்படி வரும்.

image

இப்போழுது இந்த இரண்டில் ஏதாவது ஒரு எண்ணை குறுக்கே கழிக்கவும். (8-4=4 or 6-2=4)

image

அப்படி கழிக்கும் போது வரும் எந்தான் விடையின் முதல் எண்.  இனி கீழே உள்ள எண்களை பெருக்கி போட்டால் நமது விடை கிடைத்து விடும். அதாவது (2 X 4 =8)

image

இன்னொரு உதாரணம் பார்ப்போமா?

image

image

image

image

இதை பெருக்க எதற்கு இத்தனை சிரமம்.. வாய்பாடு தெரிந்தால் போதுமேன்னு நினைக்கிறீர்களா?… உங்களுக்கு விடை தொடர்கிறது…

இப்போ , இதை பெருக்க வேண்டும்…

image

இப்போ முதலில் 10 போட்ட இடத்தில் 100 போட்டால் போதும்.. உங்கள் விடை ரெடி.

image

தொடரும்….

தமிழ்நாடு அரசு பாடபுத்தகங்கள் PDF வடிவில்....இங்கு தமிழ்நாடு அரசு பாடபுத்தகங்கள் அனைத்தும் தரவிறக்கம் செய்யும் வகையில் உள்ளது. உங்களுக்கு அருகில் யாராவது ஏழைகள் இருந்தால் இதை பிரிண்ட் செய்து கொடுக்கவும்.. அனைத்து வகுப்புகளுக்கும் உள்ளது...