இன்று புதிதாய் ஒரு உலகம்....

இன்று புதிதாய் ஒரு உலகம்....
கடவுளா நீ?

என் பாலைவனத்தில் மழை...
யாரால் முடியும்....கடவுளால்...
கடவுளா நீ?

வாயை மூட மட்டுமே பயன்படுத்திய
உதடுகள் ...இன்று புன்னகைக்கவும் செய்கிறதே....
யார் சொன்னால் உதடு கேட்க்கும்... மனம் சொன்னால்...
மனம் என்றால்....இதயம்.....
என் இதயமா நீ.....

இன்று மீண்டும் பிறந்தது போல் உணர்கிறேன்...
யாரால் என்னை பெற்றடுக்க முடியும்...தாயால்....
என் தாயா நீ?...

எல்லாமே நீ...நீதான்.... உன்னால்தான் முடியும்...
ஏன் தெரியுமா....
நான்தான் நீ...

Comments :

0 கருத்துகள் to “இன்று புதிதாய் ஒரு உலகம்....”

கருத்துரையிடுக