பில் கேட்சுக்கு - எங்க ஊரு குப்பனின் கடிதம் .....

ஐயா,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find"மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

Thanks to Nilacharal.

Published in http://www.nilacharal.com/tamil/jokes/sardarji_jokes_300.asp ...

ஈமெயில் தீவிரவாதம் ....

உடம்பு முழுக்க குண்டுகளையும் கையில் துப்பாக்கிகளையும் வைத்து கொண்டு போற வார அப்பாவி மக்களை கொன்று குவிப்பது மட்டுமல்ல தீவிரவாதம்...

எனக்கு வந்த ஒரு ஈமெயில் உம் ஒரு வகையில் தீவிரவாதம்தான்... மெயிலோட தலைப்பு இதுதான்... "Torture on muslims after Mumbai blast...." .. தலைப்பை பார்த்தும் எனக்கும் கோவம் வந்தது... என்னடா இது ... அவன்தான் கேனத்தனமா இப்படி பன்றங்கன்ன நம்ம ஆளுக்கு எங்கே போச்சு புத்தி... இதுக்கும் முஸ்லிமுக்கும் என்ன சம்பந்தம் ... ஏன் முஸ்லிமை அடிக்கனும்னு கோவம் வந்தது...

I wish they are cursed with crippling arthritis and cerebral palsy. May Allah bewail the curse of ill health evil and misfortune on them. _______________________________________ This is the clip of torture Muslims student after the Mumbai blast. You can see Indian police are standing there and just watching as silent spectacles. My question is why Hindus in Pakistan are safe after Karachi, Lahore, Islamabad, Peshawar and all the blast occured in Pakistan. If we in Pakistan start reacting like Indian people, that start beating and killing Indians and Hindus available in Pakistan after every blast. In Mumbai blast only 200 ppl dead and 400 ppl injured, while in Pakistan blasts by Indians killed thousands of ppl and injuring lacs of innocent Pakistanis. This is just the message for Indians that if Pakistan start reacting like that as shown in clip, none of Hindus will live alive in Pakistan.

இத படிச்சிட்டு , அந்த இணைப்பில் இருந்த விடியோவை ஓபன் பண்ணி பார்த்தால்... அடப்பாவிகளா ... அது சென்னை சட்ட கல்லூரியில் நடந்தது..... அதை அப்படியே போட்டிருக்கணுவ..... இதுவும் தீவிரவாதம்தான் ... இதை தண்டிக்க நாம் என்ன செய்யணும்... தெரியலை... ஆனா ஒன்னே ஒன்னு தெரியது....

"கண்ணால் காண்பதும் பொய்....
காதால் கேட்பதுவும் பொய்....
தீர விசாரிப்பதே மேல் ......."