நீ வரும் வீதியில்

புயல் கூட
நீ வரும் வீதியில்
ஒதுங்கிக் கொண்டு
தென்றலை அனுப்புகிறது....

மரணம்...

தினமும் மரணம்...
என் தலையில் நீ எழுதியது...இறைவா..
இன்று யாரால்...எப்பொழுது... ஏன்...
தெரிந்தால்...நிம்மதியாய்
மீண்டும் உயிர் விடுவேன்....

பூக்கள்

உனக்காக என்றால்
தற்கொலை படையாக மாறி
என் கையில் வந்து
சிரித்துக்கொண்டே மரிக்கிறது பூக்கள்...

இன்று புதிதாய் ஒரு உலகம்....

இன்று புதிதாய் ஒரு உலகம்....
கடவுளா நீ?

என் பாலைவனத்தில் மழை...
யாரால் முடியும்....கடவுளால்...
கடவுளா நீ?

வாயை மூட மட்டுமே பயன்படுத்திய
உதடுகள் ...இன்று புன்னகைக்கவும் செய்கிறதே....
யார் சொன்னால் உதடு கேட்க்கும்... மனம் சொன்னால்...
மனம் என்றால்....இதயம்.....
என் இதயமா நீ.....

இன்று மீண்டும் பிறந்தது போல் உணர்கிறேன்...
யாரால் என்னை பெற்றடுக்க முடியும்...தாயால்....
என் தாயா நீ?...

எல்லாமே நீ...நீதான்.... உன்னால்தான் முடியும்...
ஏன் தெரியுமா....
நான்தான் நீ...

தூறல்

உனக்கே என்னை புரியாதபோது
என்னை
எனக்கு எப்படி புரியும்....

என்னுடன் நான் இருந்தகாலம்
அதிகமிருக்கலாம்..... ஆனால்
என்னுள் நீ இருந்த காலம் அதிகம்....

ஓவ்வொரு முறையும் அவதாரம்
எடுக்க
நான் கடவுளும் இல்லை...நீ பக்த்தையும் இல்லை...

தூறல் வானிலிருந்து மட்டுமல்ல
கண்களிலிருந்தும் வரும்.....

அடை மழைக்கு முன் அரவணைத்துவிடு....