நீ வரும் வீதியில்

புயல் கூட
நீ வரும் வீதியில்
ஒதுங்கிக் கொண்டு
தென்றலை அனுப்புகிறது....

மரணம்...

தினமும் மரணம்...
என் தலையில் நீ எழுதியது...இறைவா..
இன்று யாரால்...எப்பொழுது... ஏன்...
தெரிந்தால்...நிம்மதியாய்
மீண்டும் உயிர் விடுவேன்....

பூக்கள்

உனக்காக என்றால்
தற்கொலை படையாக மாறி
என் கையில் வந்து
சிரித்துக்கொண்டே மரிக்கிறது பூக்கள்...

இன்று புதிதாய் ஒரு உலகம்....

இன்று புதிதாய் ஒரு உலகம்....
கடவுளா நீ?

என் பாலைவனத்தில் மழை...
யாரால் முடியும்....கடவுளால்...
கடவுளா நீ?

வாயை மூட மட்டுமே பயன்படுத்திய
உதடுகள் ...இன்று புன்னகைக்கவும் செய்கிறதே....
யார் சொன்னால் உதடு கேட்க்கும்... மனம் சொன்னால்...
மனம் என்றால்....இதயம்.....
என் இதயமா நீ.....

இன்று மீண்டும் பிறந்தது போல் உணர்கிறேன்...
யாரால் என்னை பெற்றடுக்க முடியும்...தாயால்....
என் தாயா நீ?...

எல்லாமே நீ...நீதான்.... உன்னால்தான் முடியும்...
ஏன் தெரியுமா....
நான்தான் நீ...

தூறல்

உனக்கே என்னை புரியாதபோது
என்னை
எனக்கு எப்படி புரியும்....

என்னுடன் நான் இருந்தகாலம்
அதிகமிருக்கலாம்..... ஆனால்
என்னுள் நீ இருந்த காலம் அதிகம்....

ஓவ்வொரு முறையும் அவதாரம்
எடுக்க
நான் கடவுளும் இல்லை...நீ பக்த்தையும் இல்லை...

தூறல் வானிலிருந்து மட்டுமல்ல
கண்களிலிருந்தும் வரும்.....

அடை மழைக்கு முன் அரவணைத்துவிடு....

Swa.Le (சொந்தம் லேகனம் - என் பத்திரிகை

இத்தனை நாளும் தொலைக்காட்சியில் "Breaking News" பார்த்ததற்கும் இனிமேல் நான் பார்க்கபோகும் "Breaking News" -க்கும் மிக பெரிய வித்தியாசம் இருக்கும். காரணம் - Swa.Le (சொந்தம் லேகனம் - என் பத்திரிகை).

ஒவ்வொரு தற்போதைய செய்தியின் பின்னணியிலும் இதுபோன்ற ஒரு பத்திரிக்கையாளனின் செய்தியும் இருக்கிறது என்று நினைக்கும் போதே உள்ளம் பதறுகிறது. ஒவ்வொரு நிகழ்வையும் பத்திரிகை தர்மம் எனும் கண் கொண்டு பார்க்கும் கண்களுக்கு அதற்க்கு கொஞ்சம் கீழே இருக்கும் பத்திரிக்கையாளனின் இதயம் தெரியாமல் போயிருமோன்னு தோண வைக்கிறது..

கதை.... மரண தருவாயில் இருக்கும் கேரளத்தின் மிகப்பெரிய எழுத்தாளனின் வீட்டின் முன் கூடியிருக்கும் பத்திரிகை நிருபர்களின் ஒருவனின் வாழ்க்கை. அதுவும் அந்த எழுத்தாளனுடன் சின்ன வயதின் ஒரு பருவத்தை அவருடன் கழித்து அந்த உந்துதலில் பத்திரிக்கையாளனாய் ஆனா ஒருவனின் கதை.

இன்னும் நிறைய எழுதனும்னு ஆசை ... படத்தை பற்றி... ஆனால் வேண்டாம் ... படம் பாருங்கள்...

எளிய முறையில் கணிதம் – சிறுவர்களுக்கு… பாகம்-2 (விடையை சரி பார்த்தல்)

போன பதிவில் எப்படி பெருக்குவது என்று பார்த்தோம்.  இப்போ நாம் செய்து முடித்த கணக்கு சரிதானா என்பதை சுலபமா எப்படி சரி பார்ப்பது என்பதை பார்க்க போகிறோம்.

eg.  12  x 14 = 168    இதை எப்படி சரி பார்ப்பது?…

இந்த கணக்கை மூன்று பகுதியாக பிரிக்க போகிறோம். 

1.அதாவது நம்ம கணக்கில் முதல் எண் 12. இப்போ இதை 1+2 என்று கூட்டிக்கொள்ள வேண்டும். அப்போ 3 விடை.

2. இப்போ இரண்டாவது எண். 14. அதையும் 1+4 = 5 என்று கூட்டிக் கொள்வோம்.

இப்போ முதலில் உள்ள விடையையும் இரண்டாவது உள்ள விடையையும் பெருக்கவும். 3 x 5 = 15 . இதுவும் இரண்டு இலக்கமாக வருவதல் இதையும் பக்கவாட்டில் கூட்டவும் ( 1 + 5 = 6)  இப்போ நம்ம விடை 6.

3. இப்போ நம்ம கணக்கின் மூன்றாவது பகுதி… 1 + 6 + 8 = 15 . விடை இரண்டு இலக்கமாக இருப்பதால் மீண்டும் 1 + 5 = 6

முதல் விடையும் இரண்டவது விடையும் ஒரே மாதிரி வந்தால் நம்ம கணக்கு சரி…………….

தொடரும்….