பில் கேட்சுக்கு - எங்க ஊரு குப்பனின் கடிதம் .....

ஐயா,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find"மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

Thanks to Nilacharal.

Published in http://www.nilacharal.com/tamil/jokes/sardarji_jokes_300.asp ...

ஈமெயில் தீவிரவாதம் ....

உடம்பு முழுக்க குண்டுகளையும் கையில் துப்பாக்கிகளையும் வைத்து கொண்டு போற வார அப்பாவி மக்களை கொன்று குவிப்பது மட்டுமல்ல தீவிரவாதம்...

எனக்கு வந்த ஒரு ஈமெயில் உம் ஒரு வகையில் தீவிரவாதம்தான்... மெயிலோட தலைப்பு இதுதான்... "Torture on muslims after Mumbai blast...." .. தலைப்பை பார்த்தும் எனக்கும் கோவம் வந்தது... என்னடா இது ... அவன்தான் கேனத்தனமா இப்படி பன்றங்கன்ன நம்ம ஆளுக்கு எங்கே போச்சு புத்தி... இதுக்கும் முஸ்லிமுக்கும் என்ன சம்பந்தம் ... ஏன் முஸ்லிமை அடிக்கனும்னு கோவம் வந்தது...

I wish they are cursed with crippling arthritis and cerebral palsy. May Allah bewail the curse of ill health evil and misfortune on them. _______________________________________ This is the clip of torture Muslims student after the Mumbai blast. You can see Indian police are standing there and just watching as silent spectacles. My question is why Hindus in Pakistan are safe after Karachi, Lahore, Islamabad, Peshawar and all the blast occured in Pakistan. If we in Pakistan start reacting like Indian people, that start beating and killing Indians and Hindus available in Pakistan after every blast. In Mumbai blast only 200 ppl dead and 400 ppl injured, while in Pakistan blasts by Indians killed thousands of ppl and injuring lacs of innocent Pakistanis. This is just the message for Indians that if Pakistan start reacting like that as shown in clip, none of Hindus will live alive in Pakistan.

இத படிச்சிட்டு , அந்த இணைப்பில் இருந்த விடியோவை ஓபன் பண்ணி பார்த்தால்... அடப்பாவிகளா ... அது சென்னை சட்ட கல்லூரியில் நடந்தது..... அதை அப்படியே போட்டிருக்கணுவ..... இதுவும் தீவிரவாதம்தான் ... இதை தண்டிக்க நாம் என்ன செய்யணும்... தெரியலை... ஆனா ஒன்னே ஒன்னு தெரியது....

"கண்ணால் காண்பதும் பொய்....
காதால் கேட்பதுவும் பொய்....
தீர விசாரிப்பதே மேல் ......."

சைத்தானை படைத்தது யார்?

நேத்து நான் என்னோட பையனை பள்ளியிலிருந்து வீட்டுக்கு கூட்டி கொண்டு வரும்போது அவனும் அவனோட நண்பனும் (இரண்டு பேருமே படிப்பது 3 ஆம் வகுப்பு) பேசிகிட்டது...

நிறைய பேசிகிட்டே வந்தாங்க.. திடீர்னு பேச்சு கடவுள் பக்கம் திரும்பிட்டது...

டேய் ... கடவுள் இருக்குறது உண்மையா?
இவன் பதில் சொல்லாம ..... அப்போ சைத்தான் இருப்பது உண்மையா?
நான் கேட்டதுக்கு பதில் சொல்லு... நீ அதுக்கு பதில் கேள்வி கேக்காதே..
ஆமாம். உண்மைதான். எப்படி தெரியும்?
எங்க அப்பா சொன்னாங்க...
எல்லாரையும் படைத்தது யார்?
கடவுள்தான்.
அப்போ? சைத்தானை படைத்தது யார்?
அதுவும் கடவுள் தான்.
ஏன்டா... அவர் சைத்தானை படைத்தார்... சைத்தானை மட்டும் அவர் படைக்கலைனால் இந்த உலகத்திலே எல்லாரும் நல்லவங்களாவே இருந்திருப்பங்கள்ள....
டேய்... என்னடா புரியாம பேசுறே..... இப்போ நமக்கு ஸ்கூலில் பாடம் சொல்லி கொடுக்குறாங்க... இங்கே எக்ஸாம் இல்லேன்னா நாம எல்லாம் படிப்போமா? மாட்டோம்ல ... அதே மாதிரித்தான் கடவுளும் நினைத்திருப்பாருன்னு நான் நினைக்கிறேன்... ஆனாலும் கடவுள் நீ சொல்ற மாதிரி அந்த சைத்தானை படிக்காமல் இருந்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்....

இந்த ஆபரேஷன் -க்கு டீம் லீடர் யாராயிருக்கும்?

crane-tip1

crane-tip2

crane-tip3

crane-tip4

crane-tip5

crane-tip6

crane-tip7

crane-tip8

crane-tip9

Comments By விஜய்கோபால்சாமி

கண்டிப்பா சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிட்ட யாரோ ஒருத்தராத்தான் இருக்கனும்... சரியா?

By Vellai Nila :   இதைவிடவும் பக்காவான கமெண்ட் பண்ணமுடியுமான்னு தெரியலை.. நன்றி நண்பா..

அன்றும்... இன்றும்... என்றும்....

ஆத்தா செப்பு குடமெடுத்து
ஆத்துக்கு போனா தண்ணி கொண்டார சாயங்காலம் ஆவும்.....
இப்போ குழாயை திருப்புனா தண்ணி......

ஐயன் வண்டி கட்டி சந்தைக்கு போனா
மத்த நாள் ராவைக்குதான் வுட்டுக்கு வருவாரு....
இப்போ காலையில 5.30 வண்டியை பிடிச்சி போயிட்டு
ராவுல சாப்பிட வீட்ல இருக்காவ...

பஞ்சாயத்து ரேடியோல செய்தி கேக்க
தாத்தா சாயங்காலம் 4.00 மணிக்கே காத்து கிடப்பாவ ...
இப்போ உலக செய்தி எல்லாம் தாத்தாகிட்டேதான் கேக்கணும்...

எல்லாமே எல்லாமே .. மாறிட்டு ... ஆனா ... ஆனா...

கலாங்கரை குப்பன் மவனும் கீழ தெரு நாடார் மவளும்
காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டப்போ
அப்போ வந்த அதே சாதி கலவரம் இப்போவும்.......

மைக்ரோசாப்ட்-டும் திருநெல்வேலியும் பின்னே நானும்....

ரெண்டு வருசத்துக்கு முன்னால ஒரு இனிய மாலை பொழுதில் ராமகிருஷ்ணன் சாரை பரணி ஹோட்டல் முன்னால பார்த்தேன். சாரை பார்த்து பேசிகிட்டு இருந்தேன்... அப்போ பக்கத்திலே ஒரு நண்பர் நின்னுகிட்டு இருந்தார். சா

ரும் என்னோட வேலையை பத்தி கேட்டுகிட்டு இருந்தாங்க... நமக்குதான் யாராவது ஆள் கிடைத்தா போதுமே.... கம்ப்யூட்டரில் அப்படி பண்ணலாம் இப்படி பண்ணலாம்னு ரொம்ப பேசிகிட்டே இருந்தேன்... பக்கத்தில் இருந்தவரும் அமைதியா கேட்டுகிட்டே இருந்தார். அன்னைக்கு நான் ஏதோ சாதிச்சிட்ட மாதிரி சார்கிட்டே ஒரு 1 மணி நேரம் பேசிகிட்டு இருந்தேன். எல்லாம் கம்ப்யூட்டர் பத்திதான் .

அவ்வளவு நேரம் பேசி முடிச்சிட்டு சார்ட்ட
"இது யார் சார் னு கேட்டதுதான் தாமதம்.."
இவரை தெரியாதா? இவர்தான் மகேஷ்.. - சார்
இல்லையே ... தெரியாதே... சொல்லவும்
என்னா தம்பி, கம்ப்யூட்டர் துறையில் இருக்கீங்க? நம்ம ஆள்களை தெரிந்து வைத்து கொள்ள வேண்டாமா?... இவர் உங்க துறையில் நிறையா சாதனை செய்திருக்கிறார்.. நம்ம நெல்லையை சேர்ந்தவர்.... அதான் மைக்ரோசாப்ட் கம்பனிக்கு கூட ஏதோ ப்ரோக்ரம்லாம் பண்ணி கொடுத்திருக்கிறார்...
என்னது மைக்ரோசாப்ட் - க்கா...
ஆஹா அதிகமா பேசிட்டோமோன்னு அப்போதான் தோணிச்சு ....
அதான் சொல்வாங்க ... "நிறை குடம் தழும்பாது.... அறை குறைதான் அதிகமா அலம்பும் புலம்பும்னு .."

2006071416510101
அந்த தமிழனை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறேன்..

கிளிக் ஹியர் :

ஒரு ரூபாய்க்கு உலகத்தில் எங்கிருந்தும் இந்தியாவுக்கு பேச ... (VOIP)

ஒரு ரூபாய்க்கு உலகத்தில் எங்கிருந்தும் இந்தியாவுக்கு பேச ... (VOIP)

வெளிநாட்டில் இருப்பவங்க ரொம்ப செலவழிப்பது ஊருக்கு போன் பேசத்தான். இந்த சைட் மூலமா பேசினால் ஒரு ரூபாய் தான் வரும்.. சவுண்ட் குவாலிட்டியும் நல்லா இருக்கு.

www.freecall.com

You can pay by Credit card ....

போகிற போக்கில்

போகிற போக்கில் .... நம்ம பசங்க போகிற போக்கில் அடிச்சி விட்டுட்டு போற சில சின்ன சின்ன ஜோக்ஸ்.....

Joke Number 1:
பசங்க எல்லாரும் சேர்ந்து குற்றாலத்திற்கு போயிருந்தோம்... கல்யாணி (கல்யாண சுந்தரம்) ஒரு பிளாட்பாரம் கடையில போய்
"தாத்தா ... வாழைபழம் வேணும்.... எவ்ளோ?"
ஒரு பழம் 50 பைசா தம்பி......
என்ன தாத்தா ... இம்பூட்டு சொல்றீங்க? ரூவாய்க்கு ரெண்டுன்னு .. எங்க ஊரில் சிரளியுது.... நீங்க யானை விலை சொல்றீங்க?....
அப்போ அவர் அவனை பார்த்த பார்வையை பாக்கனுமே?....

Joke Number 2:
எட்டாங்கிளாஸ் படிச்சிகிட்டு இருக்கும்போது.... கேம்ஸ் கிளாஸ்.... எங்க P.T. வாத்தியாருக்கு எப்பவுமே ஒலிம்பிக்ஸ் ட்ரைனிங் கொடுக்கிறோம்னு நினைப்பு.... அன்னைக்கு ரன்னிங் ரேஸ் காக சொல்லி கொடுத்துகிட்டு இருந்தார்.
எல்லாரும் வருசையா நில்லுங்க.... "
On Your Mark "
இப்போ மெதுவா வலது காலை முன்னால ஒரு ஸ்டெப் வைச்சி உக்காருங்க.... எல்லாரும் உக்காந்தோம்...
" Get Ready , Steady "
இப்போ மெதுவா தலையை மேலே தூக்கி ஒரு 3 மீட்டர் தூரம் பாருங்க... நான் "Go" சொன்னதும் ஓட ஆரம்பித்து விடலாம்னு..
சொல்லிக்கிட்டு இருக்கும்போதே பீட்டர் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சான். வாத்தியாருக்கு வந்தது கோவம்.
ஏன்டா ... ஏன்டா... ஏன் சிரிக்கிற ... கேக்க கேக்க .. இன்னும் அதிகமா சிரிச்சிகிட்டு இருந்தான். அவர் இன்னும் கோவப்பட்டு இப்போ சிரிக்கிறதை நிப்பாட்ட போறியா..இல்லையான்னு கத்தவும் நிறுத்தினான்....

அப்புறம் அவர் ஏன்டா சிரிச்சே.... இல்லை சார்... "Get Ready, Steady" சொன்னதும் மெதுவா தலையை தூக்கி 3 மீட்டர் தூரம் பார்க்க சொன்னேங்கள்ள... இந்த சுப்பையா 3.8 மீட்டர் தூரம் பார்த்துட்டான் சார்...

இன்னைக்கும் இதை எழுதும்போதும் எனக்கு சிரிப்பை அடக்க முடியாமல் தான் எழுதுகிறேன்...

Joke Number 3.
கட்டை ராதா.. எங்க கூட ரெண்டு ராதாகிருஷ்ணன் படிச்சாங்க.. அதனால் ஒருத்தன் பெயர் கட்டை ராதா..இன்னொருத்தன் நெட்டை ராதா... கட்டை ராதா ரொம்ப ஜாலியான பேர்வழி... ஆனால் ரொம்ப பொறுப்பானவன்.
இப்படித்தான் ஒரு ஞாயிற்றுகிழமை காலையில் அவனோட அம்மா "டேய் ராதா ரெண்டு தேங்கா சில்லு வாங்கிட்டு வாடான்னு 80 பைசா கொடுத்திருக்காங்க.... இவனும் தேங்கா வாங்க பஸ்ஸ்டாண்டிற்கு வரவும் அங்கே என்னோட இன்னொரு நண்பன் திருநெல்வேலிக்கு 10.30 மார்னிங் ஷோ வுக்கு கிளம்பி வந்திருக்கான்.
அவன் இவன்ட்டே மாப்ஸ்.. படத்துக்கு போறேன் வரியா... ன்னு கேக்கவும் தலைவர் எஸ்கேப்.... படத்துக்கு போயாச்சி... திருநெல்வேலி வரை வந்துட்டு ஒரு படத்தோட போகவா... மதியம் 2.30 நூன் ஷோவும் பார்த்துட்டு தலைவர் வீட்டுக்கு போயிருக்கார்...எப்போ ...? ராத்திரி 7.30 மணிக்கு....ராத்திரி வீட்டுக்கு போனவன் சும்மா இருந்த்திருந்தால் கூட அவங்க அம்மாவுக்கு கோவம் வந்திருக்காது... நேரா அவங்க அம்மாகிட்டே போய் ... "அம்மா இந்த தேங்கா சில்லுன்னு " கொடுத்திருக்கான்... அன்னைக்கு அவனுக்கு விழுந்த ஏச்சுக்கு ஈடு இணையே கிடையாது...

உங்களுக்கு இந்தியாவின் பிரதமராகும் தகுதியிருக்கா? Test Here.

டெஸ்ட் - 1
இங்கே கீழே இருக்கும் படங்களை முதலில் பார்க்கவும் ....

1
பாவம் ... யாராவது ஹெல்ப் பண்ணுங்க...
2
Microsoft - ல தயாரிச்ச வாட்ச்
லைட்-ஆ சிரிச்சீங்க தானே.....? Sorry you are பிரதமராகும் தகுதி இல்லை.... eliminated... உங்களுக்கு இந்தியாவின்
டெஸ்ட் - 2  
cubebike2

இவனுக்கு அவங்க அப்பாகிட்டே சொல்லி இப்போதான் சைக்கிள் வாங்கி கொடுத்தேன்... இன்னும் ஏன் அழுவுறான்.???  (சே ....சே ... இந்த காலத்து பயன்களை புரிஞ்சிகிடவே முடியலைப்பா....)

 

   
   
   
cubebike

ஆஹா........ அவசரப்பட்டுடோமோ?.. (வடிவேலு ஸ்டைல்ல படிக்கவும்.....ப்ளீஸ்...)

சிரிச்சீங்க தானே.....?                 Sorry you are பிரதமராகும் தகுதி இல்லை.... eliminated... உங்களுக்கு இந்தியாவின்
   
டெஸ்ட் - 3  
31 இன்னைக்கு எங்க கம்பெனி டெலிபோன் ஆப்ரேட்டருக்கு வேலை பார்க்கிற மூட் இல்லை போல......
speed-limit-3

வெளிநாட்டிலேயே ரோடு இப்படியிருந்தால் இந்தியாவில் கேக்கவா வேணும்?

speed-limit-2 அடங்கொக்கா மக்கா... ரூம் போட்டு யோசிப்பாணுவ போல ......
funny-picture-photo-child-toilet-massdistraction-pic

ஒண்ணும் இல்லை .. சார் அவசரமா பாத்ரூம் போறேன்னு  வந்தாரு... ரொம்ப நேரமா ஆளைக் காணோமேன்னு உள்ளே வந்து பார்த்தா.....

   

narasimha_rao

இன்னும் உங்க மூஞ்சி இப்படித்தான் இருக்கா?

Yes.. Yes... You have all the ability to be our next Indian prime minister....

படங்கள் உதவி: www.jokesduniya.com & Google Image Search

Note :  இந்த பதிவு சும்மா ... டைம் பாஸ்சுக்கு தான்.... யாரையும் தாக்கனும் என்ற எண்ணம் துளியும் இல்லை...

படிப்புல்லாம் வேண்டாம்..... வேண்டவே வேண்டாம்.......

ஏலேய்ய்... நாளைக்கு எல்லாரும் நல்ல டிரெஸ்ஸ போட்டுட்டு வாங்கடா... நம்ம கம்பெனிய படம் புடிக்க B.B.C யிலேருந்து வராங்கடா ... ஏலேய்ய் அதுவொண்ணும் சாதரண டிவி இல்லை. உலகம் பூராவும் தெரியகூடியது .. என்று மொதலாளி சொன்னதும் அந்த சின்ன வெடி பட்டரை அல்லோலகல்லோல பட்டது.

சிவா , நீ என்ன ட்ரெஸ் போடுவேடா?

நான் என்னத்தை , என் போன வருஷ தீவாளி டிரஸ் தான் போடணும். இந்த வருஷம்தான் புதுசு எடுக்கலையே ...

வித விதமான ஆலோசனைகள்.
எல்லார் மனதிலும் நாம T.V. யில வரப்போரோம்ங்க்ற சந்தோசம்.

விடிந்தது...... பெரிய கேரவன் வேன் வந்து நின்றது.. எல்லா ஆரம்ப வேலைகளையும் முடித்து அந்த பெண் பேட்டி எடுக்க ஆயத்தமானாள்.

தம்பி... உன்னோட பெயர் என்ன ?
ராஜா ...
இந்த வேலை உனக்கு பிடிச்சிருக்கா?
ஆமாம். படிக்கணும்னு ஆசை இல்லையா?
ரொம்ப இருக்குங்க... ஆனா குடும்ப சூழல் அப்படி... அதானால்தான் வேலைக்கு வந்துட்டேன். என் அக்கா கூட இங்கேதான் வேலை பார்க்கிறாள்.
அப்பா என்ன செய்கிறார் ...
அப்பா சும்மாதான் இருக்கிறார் .. எங்க சம்பளம் தான் குடும்பத்துக்கு....

அடுத்தது ...அடுத்தது ... எல்லாரிடமும் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தாள். எல்லார் மனதிலும் படிக்கணும் படிக்கணும் என்றே தான் இருந்தது,,, எல்லாருக்கும் ஒரு கனவு.. படிக்க முடிந்தால் டாக்டர் ஆகணும். எஞ்சினியர் ஆகனும்னு...

அடுத்து ..
உன்னோட பெயர் என்ன தம்பி ?
சூர்யா...

Soorya 
படம் உதவி : Google Image Search


ரொம்ப நல்ல பெயர் ... ஒரு நடிகர் இருக்கருல்ல அந்த பெயரில் ஒரு நடிகர் கூட இருக்கார் தெரியுமா?
ஆமாம். ஆனா அவர் நடிக்க வர்றதுக்கு முன்னாலேயே என் பேர் சூர்யாதான்..
சரி. எல்லாருக்கும் படிக்கனும்னு ரொம்ப ஆசை இருக்கு... உனக்கு படிச்சி என்னவா ஆக ஆசை?
இல்லை. எனக்கு படிக்க ஆசை இல்லை.
என்னது... படிக்க ஆசை இல்லையா? தம்பி தப்பு. ரொம்ப தப்பு. படிக்க முடியலைங்கறது சூழல். ஆனா மனசுக்குள்ள படிக்கணும் என்ற எண்ணம் இருந்த்கிட்டே இருக்கணும். அப்போதான் எப்போ சான்ஸ் கிடைத்தாலும் படிக்கனும்னு தோணும்.

அதெல்லாம் எனக்கு தெரியாது... எனக்கு படிக்க விருப்பமில்லை...

என்ன நீ.... நான் சொல்றேன். கொஞ்சம் கூட திருந்த மாட்டீயா? படிக்கனும் என்ற ஆசை மனதுக்குள் கொண்டுவரனும். அப்போதான் முன்னேற முடியும்...
அவளுக்கு கொஞ்சம் கோவம் வந்தது. இந்த சின்ன வயசில இப்படி அழுத்தமா இருக்கானே என்று...

அவனுக்கும் அதே கோவம் வந்தது.... கோவத்தோட மறுபடியும் சொன்னான் ... இல்லைங்க .. எனக்கு படிக்க புடிக்கலை.. இங்க வேலை பார்த்தா போதும்.. இங்க கிடைக்கிற அஞ்சோ , பத்தோ போதும்...

என்னப்பா நீ .. இப்படி சொல்றே... நீ சின்ன பையன் .. இன்னும் எவ்வளவோ இருக்கு வாழ்க்கையில ...

சொல்லவும் அவன் வெடித்தான்.... ..... .... ஆமாங்க ... இருக்கு.... இருக்கு....

அவளுக்கு பேச தோணலை.... அவனை கோவமாய் பார்த்தாள்...

அந்த பார்வை .... இவனை ஏதோ செய்ய .. மீண்டும் வெடித்தான்..

ஆமாங்க... இருக்கு.... இன்னும் எவ்வளவோ இருக்கு... அஞ்சு ரூவாக்கும் பத்து ரூவாக்கும் உங்க அம்மா செருப்பால ... வாரியலால் அடி வாங்கறதை பாத்திருக்கீங்களா? நான் பாத்திருக்கேன்.. தினமும் பார்த்துகிட்டு இருக்கேன்... அந்த அஞ்சு ரூவாவோ பத்து ரூவாவோ சாயங்கலம் கொண்டுபோய் கொடுத்து எங்க அம்மாவை அப்பன் கிட்டேயிருந்து காப்பாத்தினா போதும்ங்க ... படிப்புல்லாம் வேண்டாம்...வேண்டாம் ... வேண்டவே வேண்டாம்.......

1995, Bsc. Result Day And 2008,Today

1995, Bsc. Result Day

திருநெல்வேலி சந்திப்பிலிருந்து பஸ் பிடித்து Science Center Stop-இல் வந்து இறங்கும் போது எனக்கு B.Sc. ரிசல்ட் பார்க்க போற எந்த பதட்டமும் இல்லை.

பேருந்திலிருந்து இறங்கும் போது  குலாம் (என் தோழன்) பார்த்தேன் ... என்னை பார்த்ததும் கண்கள் சிவக்க அழுதுவிட்டான் ... என்ன ஆச்சு  குலாம் பாய் ... விடுங்க ... எக்ஸாம் result தானே ... வாழ்க்கையோட result இல்லையே.... விடுங்க விடுங்க.... சொல்லியும் விடாமல் அழுதுகொண்டிருந்தான் ...

குலாம் ... என்னோட விடுதியில் ரூம் மேட் ... ரொம்ப நல்லா படிக்ககுடியவன். அவனே அழுதுகிட்டு இருக்கான்... அப்போ நான் ... எனக்கு நினைக்கையிலே கொஞ்சம் பயம் வந்தது... சரி .. விடுங்க ... குலாம் ... எடுத்து எழுதிடலாம்....

எந்த பேப்பர் போயிருக்கு? கேக்கவும் சிஸ்டம் அனலிசிஸ் ... சொல்லி மீண்டும் கண்கள் கலங்க நின்றிருந்தான் ...

ஏன் உங்க வீட்டில் சத்தம் போடுவாங்களா? - நான்

இல்லை சூர்யா ... நான் எல்லாம் பாஸ் ஆயிட்டேன்...வழக்கம்போல அதே 85-90%. உனக்குதான் சிஸ்டம் அனலிசிஸ் போயிருக்கு.... - குலாம்

என்னது..... எனக்கு ஒரே ஒரு பேப்பர்தான் போயிருக்கா? எனக்கு ரொம்ப சந்தோசம் .... 14 paper எழுதி ஒன்னே ஒன்னுதான் போயிருக்கா..... என்ன குலாம் பாய்.... நான் பெயில் ஆனதுக்கா அழுறீங்க? .... குலாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு... நான் அந்த பேப்பர் எப்படியும் அடுத்த செமஸ்டர்ல எடுத்துருவேன்னு சொல்லி சமாதனப்படுத்திட்டு வீட்டுக்கு வந்தேன்....

2008,Today

இப்போ நான் Saudi Arabia - வில் ஒரு கம்பென்யில் System Analysist .

கரெக்ட் .. நீங்க மனசுக்குள்ளே நினைக்கிறது எனக்கு கேக்குது.....

Yes.குலாம் என்ன பண்றாருன்னு தானே கேக்குறீங்க?

அவர் கடையநல்லூரில் மரக்கடை வைத்திருக்கிறார்.

13 gigapixel camara - வில் எடுத்த படம் பார்ப்போமா?

 

13 gigapixel camara - வில் எடுத்த படம் பார்ப்போமா? இங்கே கிளிக்கவும்

http://www.harlem-13-gigapixels.com/

ஹை கூ ...

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதானால்தானோ என்னவோ மந்திரங்களை போலவே தந்தையின் சொல்லும் புரியாமலே போனது....

ஆங்கிலம் கத்துக்கலாம் வாங்க .....

ஆங்கிலம் கத்துக்கலாம் வாங்க .... நேத்து இந்த ப்ளாக் பார்த்தேன் ... ரொம்ப ஆர்வமாகவும் ரொம்ப பயனுள்ளதாவும் இருந்தது ... யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ....


ஆங்கிலத்தை நம்ம தமிழ் மொழி மூலமாக படிக்க ......


அதுதான் அவனுக்கு சரியான தண்டனையாய் இருந்தது ......


ரொம்ப நாளைக்கு முன்னால என்னோட நண்பன் சொன்ன ஒரு சம்பவம் ... 
நண்பன் ரொம்ப முற்போக்கு சிந்தனைவாதி ... எல்லாத்தையுமே மூளையால் யோசிக்காமல் இதயத்தால் யோசிப்பவன் .... யானைக்கும் அடி சருக்கும்தனே... அப்படித்தான் சறுக்கியது...  

திருநெல்வேலியில் இருந்து மதுரையை நோக்கிய பயணம் ... இரவு 9.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து கிளம்பியாச்சு... அந்த பேருந்து நாகர்கோவிலில் இருந்து சென்னையை நோக்கி போய் கொண்டிருந்தது... பேருந்தில் ஏறியாச்சு ... அருகில் ஒரு பெரியவர்... பார்த்ததுமே விவசாயி என்பது தெரிந்தது. சட்டை இல்லாமல் பழுப்பு கலரில் ஆன வெள்ளை வேஷ்டி... நாகர்கோவிலில் இருந்து வர்றார் போல... தூக்க கலக்கம் நல்லாவே தெரிந்தது.... அவருக்கு அடுத்த சீட் என்னோட நண்பனுக்கு... 

பேருந்து நிலையத்தை தாண்டியதுதான் தாமதம்... பெரியவர் மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டார்.... தூக்கம் ரொம்ப கூடி ...கூடி ... நண்பர் மேலே மெதுவா சாய ஆரம்பித்துவிட்டார்... இவன் கொஞ்சம் பொறுத்து பார்த்து ... பொறுத்து பார்த்து ... மெதுவா அவர் தலையை தள்ளி விட்டிருக்கான்... மெதுவா முழிச்சி பார்த்துதுட்டு மீண்டும் அதே தூக்கம்.... ஒரு அரைமணி நேரம் பார்த்துட்டு ... இது தேறாது ,,, ரொம்ப கஷ்டமா போகவும் "தாத்தா ...தாத்தா... கொஞ்சம் நேரா உக்காருங்க ... விட்டா மடியில படுத்துருவீங்க போல இருக்கே ".. என்று எரிச்சலாய் சொல்ல அவர் தம்பி மன்னிசிக்கப்பா ... இப்போதான் வயகாட்டிலே இருந்து வந்தேன் ... என் மவ பெரிவளுக்கு உடம்புக்கு முடியலை .. இப்போ தான் போன்வந்தது..அதன் பதறி அடிச்சிகிட்டு ஓடிவந்தேன் ... மன்னிசிக்கப்பா ... 
சரி ... சரி... பரவாஇல்லை ... இனிமே சாயாமல் நேரா தூங்குங்க ... நண்பன் ஆனால் அவர் துங்க வில்லை... கண்களில் என்னலாமோ சிந்தனை தெரிந்தது ... அனாலும் இவனுக்கு ஒன்னும் தோணலை ...  

நேரம் ஆக ஆக நண்பனுக்கு தூக்கம் வந்திருக்கு ... தலைவரும் நல்லா தூங்கிட்டாரு.. நேரம் நேரம் ஆக ஆக ... இவன் கொஞ்சம் கொஞ்சமா அவர் மேலே சாய ஆரம்பிச்சிருக்கான் .. கொஞ்சம் உணர்வு வர ... அவர்ட்ட சாரின்னு சொல்லிடு மீண்டும் தூங்கியிருக்கான் ... மீண்டும் மீண்டும் தூக்கம் வந்து தூங்க கொஞ்ச நேரத்தில் அவர் மெதுவா இவன் தலையை தூக்குவது தெரிந்தது. முழித்தும் முழிக்க முடியாமலும் இருக்கும்போது அவர் மெதுவா அவர் தலையில் இருந்த துண்டை அவிழ்த்து செம்மாடு(துண்டை ரவுண்டா சுத்தி தலைக்கு வைத்து படுக்க தலையணை மாதிரி இருக்கும் ) கட்டி நெஞ்சில் வைத்து அவன் தலையை அதில் வைத்திருக்கிறார்.அப்போதான் அவனுக்கே தெரிந்தது அவன் படுதிடுந்த அந்த நெஞ்சில் நெஞ்சு எலும்பு தூக்கி கொண்டிருந்தது ... அவனுக்கு படுக்க இடைஞ்சலாய் இருந்தது .... அதற்கு அப்புறம் அவன் தூங்கவில்லை ... ஆனால் அந்த நெஞ்சில் இருந்து தலையை எடுக்கவும் இல்லை...  

அதுதான் அவனுக்கு சரியான தண்டனையாய் இருந்தது ......

ஏழங்களாஸ் டீச்சர்...

நினைவு துகள்களுக்குள்
ஒரு பயணம்...
மறக்காத .. இல்லை...இல்லை .. மறக்கமுடியாத முகமுமாய்
மறந்து போன பெயருமாய்
என் ஏழங்களாஸ் டீச்சர்...

ஒரு நாளும் ஒரு நொடியும்
எங்களை தொடாத டீச்சர் கை பிரம்பு....

உச்சி வெயிலிலும் உறங்காமல் நிழல் தந்த வேங்கை மரநிழலில்
சொல்லி தந்த வாழ்க்கை பாடம்....

புரியாத வயசு...அறியாத வயசு....
ஆனாலும் 
"டேய்...டீச்சர்...நம்மளையெல்லாம் நல்லா
படிக்க வைப்பதற்காய்...கல்யாணமே
பண்ணிக்கலைடா...." - தோழன் சொன்னது
இதயம் தொட்டு
கண் வழியே நீராய் நின்றது....

அழகில்லாத முகமுமாய்...
அழகான இதயமுமாய்....நீங்கள்....

எதையுமே....எதையுமே...
மறக்க முடியாது....டீச்சர்....மறக்க முடியாது....
என்றுதான் எண்ணியிருந்தேன்... ஆனால்...

வாழ்க்கை எல்லாத்தையும் மறக்கடித்தது...
மனதை மழுங்கடித்தது...நேற்று வரை...

"டேய்... நம்ம ஏழங்களாஸ் டீச்சர்
கேன்ஸர்ல இற்ந்துட்டாங்களாம்....".....

"சில்க்"-பாய்


ஆண்டாண்டு காலமாய் எண்ணெய் தேய்க்காத பரட்டை வெள்ளை முடி...
கொஞ்சம் குள்ளமான உருவம்....
வாய் நிறைய சிரிப்பு...
அழுக்கேறிய உடை....
கையில் தண்ணீர் கேத்தல்....
--- இதுதான் "சில்க்"-பாயின் அடையாளம்.

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் கல்லூரியின் விடுதியில் சமையல் அறையிலேயே வாழ்க்கை மொத்தத்தையும் தொலைத்த அந்த மனிதனின் அடையாளம்.

இளமை கொழுப்பில் நாங்கள் செய்த மொத்த அராஜகத்திற்க்கும் சிரிப்பை மட்டுமே பதிலாய் தந்த அந்த மனிதனை இன்னும் நான் மறக்காமல் இருப்பது எனக்கே கொஞ்சம் பெருமையாய் இருக்கிறது. அதிகம் பேசியதில்லை அவர். ஆனால் பற்றிய செய்திகள் அதிகம் பேசும். எனக்குத் தெரிந்து யாரிடமும் கோபப்பட்டதில்லை. நான் கூட நினைப்பதுண்டு இறைவன் இவருக்கு கோபம் என்ற உணர்வையே கொடுக்கவில்லையோ ..என்று...

மதிய உண்வு இடைவேளையின் போது உணவு வாயை எட்டுதோ இல்லையோ அனைவர் வாயிலும் சில்க்...சில்க்...என்று ஆயிரம் முறை வரும். "சில்க்..தண்ணி....சில்க்...பருப்புக்கு நெய் இன்னும் வரலை...இது போக காது கூச்சச் செய்யும் கேலிகள்...."அப்போ ஒண்ணும் தோணலை...ஆனா இப்போ கஷ்டமா இருக்கு. 

இது சகஜம்தானே...தமிழ்நாடு முழுவதும் இப்படி ஆயிரக்கணக்கான பேர் ஆயிரக்காண பெயர்களில் இருக்கிறார்களே...இவரிடம் அப்படி என்ன மேன்மை...என்ற உங்கள் குரல் எனக்கும் கேட்கிறது...உங்களுக்கு என் பதில்....

"ஆம்....இருக்கிறது...அந்த 40+ வயதிலும் அவருக்கு கல்யாணம் ஆகவில்லை.அவர் விரும்பவில்லை. தன்னுடைய தங்கைகளுக்கு கல்யாணம் செய்துவிட்டுத்தான் தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்து அதை நிறைவேற்றியும் காட்டினார். ஆனால் பாவம் அவர் தங்கைகளுக்கு மணமுடிக்கும்போது இவர் வயது 40 தாண்டியிருந்தது..."...

இன்னமும் என் மனதின் தீராத ஒரே வலி...கிட்டத்தட்ட 2 வருடம் விடுதியில் இருந்தேன்..அதாவது கிட்டத்தட்ட 730 நாள்கள். அதாவது கிட்டத்தட்ட 17520 மணி நேரம்..அதாவது கிட்டத்தட்ட 1051200 நிமிடங்கள்...அதாவது கிட்டத்தட்ட 63072000 நொடிகள்... இதில் ஒரே ஒரு நொடி கூட அவரிடம் அன்பாய் பேசியதில்லை. அவர் தியாகத்தை பாராட்டியதில்லை...அட...போங்க... அவரோட பெயர் கேட்டதில்லை.....என்ன ஜென்மங்க நானெல்லாம்...என்ன ஜென்மம்....