சைத்தானை படைத்தது யார்?

நேத்து நான் என்னோட பையனை பள்ளியிலிருந்து வீட்டுக்கு கூட்டி கொண்டு வரும்போது அவனும் அவனோட நண்பனும் (இரண்டு பேருமே படிப்பது 3 ஆம் வகுப்பு) பேசிகிட்டது...

நிறைய பேசிகிட்டே வந்தாங்க.. திடீர்னு பேச்சு கடவுள் பக்கம் திரும்பிட்டது...

டேய் ... கடவுள் இருக்குறது உண்மையா?
இவன் பதில் சொல்லாம ..... அப்போ சைத்தான் இருப்பது உண்மையா?
நான் கேட்டதுக்கு பதில் சொல்லு... நீ அதுக்கு பதில் கேள்வி கேக்காதே..
ஆமாம். உண்மைதான். எப்படி தெரியும்?
எங்க அப்பா சொன்னாங்க...
எல்லாரையும் படைத்தது யார்?
கடவுள்தான்.
அப்போ? சைத்தானை படைத்தது யார்?
அதுவும் கடவுள் தான்.
ஏன்டா... அவர் சைத்தானை படைத்தார்... சைத்தானை மட்டும் அவர் படைக்கலைனால் இந்த உலகத்திலே எல்லாரும் நல்லவங்களாவே இருந்திருப்பங்கள்ள....
டேய்... என்னடா புரியாம பேசுறே..... இப்போ நமக்கு ஸ்கூலில் பாடம் சொல்லி கொடுக்குறாங்க... இங்கே எக்ஸாம் இல்லேன்னா நாம எல்லாம் படிப்போமா? மாட்டோம்ல ... அதே மாதிரித்தான் கடவுளும் நினைத்திருப்பாருன்னு நான் நினைக்கிறேன்... ஆனாலும் கடவுள் நீ சொல்ற மாதிரி அந்த சைத்தானை படிக்காமல் இருந்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்....

Comments :

0 கருத்துகள் to “சைத்தானை படைத்தது யார்?”

கருத்துரையிடுக